ஆப்நகரம்

அட்டப்பாடி நீர்ப்பாசன திட்டம்: தமிழகத்தின் கருத்தை கேட்க கேரளாவுக்கு உத்தரவு

அட்டப்பாடி நீர்ப்பாசன திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, தமிழக அரசின் கருத்தை கேட்கும்படி, கேரளாவுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

TNN 18 Apr 2016, 9:48 pm
அட்டப்பாடி நீர்ப்பாசன திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, தமிழக அரசின் கருத்தை கேட்கும்படி, கேரளாவுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil centre asks kerala to consult tamil nadu over attappadi water plan
அட்டப்பாடி நீர்ப்பாசன திட்டம்: தமிழகத்தின் கருத்தை கேட்க கேரளாவுக்கு உத்தரவு


தமிழக எல்லையை ஒட்டி அமைந்துள்ள அட்டப்பாடி வனப்பகுதியில், புதியதாக நீர்ப்பாசனத் திட்டம் ஒன்றை மேற்கொள்ள கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான முதல்கட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இதுதொடர்பாக, அனுமதி கேட்டு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திற்கு கேரள அரசு விண்ணப்பித்துள்ளது. அதேசமயம், தமிழக அரசு தரப்பிலும் இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, அட்டப்பாடி நீர்ப்பாசன திட்டம் தொடர்பாக, தமிக அரசின் கருத்தைக் கேட்டு செயல்படும்படி, மத்திய அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. இது கேரள அரசுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவாகக் கருதப்படுகிறது.

அடுத்த செய்தி