ஆப்நகரம்

சிஐசிடியின் நிதியைப் பாதியாக்கிய மத்திய அரசு

சென்னையிலிருக்கும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கான நிதியை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பாதியாக குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNN 25 Sep 2017, 12:33 pm
சென்னை: சென்னையிலிருக்கும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கான நிதியை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பாதியாக குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil centre cuts fund for central institute of classical tamil into half
சிஐசிடியின் நிதியைப் பாதியாக்கிய மத்திய அரசு


தகவல் அறியும் சட்டத்தில், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் (சிஐசிடி) பற்றி பெற்ற தகவல்களில், மத்திய அரசு கடந்த ஆண்டு அளித்த நிதித்தொகையைக் காட்டிலும் இந்த ஆண்டு பாதியளவே தரப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இருப்பினும், தமிழாய்வு நிறுவனத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு அளிப்பதாகவும், அதன் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் முன்னாள் சேர்மேனாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Centre cuts fund for Central institute of Classical Tamil into half.

அடுத்த செய்தி