ஆப்நகரம்

தமிழ் மக்களுக்கு மத்திய அரசு துரோகி அல்ல: ரஜினி

தமிழக மக்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்யவில்லை தாமதித்து மட்டுமே வருகிறது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 8 Apr 2018, 7:16 pm
தமிழக மக்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்யவில்லை தாமதித்து மட்டுமே வருகிறது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Tamil_News_large_1995947


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நடிகர் சங்கம் சார்பில் இன்று கண்டனப் போராட்டம் நடைபெறுகிறது. இதில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம், சூர்யா, சத்யராஜ் உட்பட பிரபல நடிகர்கள் பலர் பங்கேற்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் தமிழக மக்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்யவில்லை; தாமதித்து மட்டுமே வருகிறது.” என்றார்.

ஐபிஎல் போட்டியின்போது சென்னை அணி வீரர்கள் தமிழக மக்களின் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் விதமாக கறுப்பு பேட்ஜ் அணிந்து விளையாடலாம் என்றும் ரஜினி கூறினார்.

அடுத்த செய்தி