ஆப்நகரம்

தலைமையாசிரியையிடம் சங்கிலி பறிப்பு

மதுரையில் அரசுப் பள்ளி தலைமையாசிரியையிடம் இருந்து, தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற இளைஞர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

TOI Contributor 22 Mar 2016, 6:41 pm
மதுரையில் அரசுப் பள்ளி தலைமையாசிரியையிடம் இருந்து, தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற இளைஞர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
Samayam Tamil chain snatched from headmistress in madurai
தலைமையாசிரியையிடம் சங்கிலி பறிப்பு


வாடிப்பட்டியை சேர்ந்தவர் தாமரைச்செல்வி. இவர், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியையாகப் பணிபுரிகிறார்.

இன்று காலை அங்கப்பன்கொட்டம் சாலையில் தாமரைச்செல்வி நடந்துசென்றுள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில், முகமூடி அணிந்து வந்த 3 இளைஞர்கள், அவரது கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.

அதிர்ச்சியடைந்த தாமரைச் செல்வி, இதுபற்றி வாடிப்பட்டி போலீசில் புகார் செய்தார். சங்கிலி பறித்துச் சென்ற நபர்களை, போலீசார் தேடிவருகின்றனர்.

அடுத்த செய்தி