ஆப்நகரம்

பழனி அருகே பட்டப்பகலில் பெண்ணிடம் நகைப்பறிப்பு!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணிடமிருந்து நகையை பறித்ததில் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்து விபத்திற்குள்ளானார்.

Samayam Tamil 17 Feb 2018, 11:06 am
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணிடமிருந்து நகையை பறித்ததில் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்து விபத்திற்குள்ளானார்.
Samayam Tamil chain snatched in pazhani and the victim women in serious condition
பழனி அருகே பட்டப்பகலில் பெண்ணிடம் நகைப்பறிப்பு!


திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பூலாம்பட்டியை சேர்ந்த சிவராஜ் மனைவி கவிதா. இவர் நேற்று மதியம் 12:00 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் கீரனுார் கன்னியம்மன் கோயிலுக்கு சென்றார். கவிதா வாகரை- தொப்பம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் கவிதாவின் ஐந்து பவுன் சங்கிலியை பறித்து தப்பினர்.

இதில் நிலைதடுமாறிய கவிதா, கீழே விழுந்து காயம் அடைந்தார். தற்போது அவர் மதுரை அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பட்டப்பகலில் சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம், நகைக்கொள்ளையர்கள் சங்கிலிப்பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பழனிப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி