ஆப்நகரம்

ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் தகவல்!

கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 14 Jul 2018, 5:52 pm
கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
Samayam Tamil pic (1)
ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் தகவல்!


இதுகுறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியிருப்பதாவது: வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று வரும் நிலையில் நீலகிரி, கோவை, தேனி, திருநெல்வேலி, திண்டுக்கல் ஆகிய மாவட்ட மலை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள ஒடிசா கடற்கரைப் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக வங்கக்கடல் பகுதியில் 60 கி.மீ. வேகத்திற்கு பலத்த தரைக்காற்று வீசும் என்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு சென்னை வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி