தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் நவம்பர் 27ஆம் தேதி வரை 60 செ.மீ அளவிற்கு மழை பெய்துள்ளது. வழக்கமாக 34 செ.மீ மட்டுமே பெய்யும் நிலையில், இம்முறை 74 சதவீதம் அதிகமாக மழை பெய்திருக்கிறது. சென்னையில் மட்டும் 77 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. அதுவும் நடப்பு நவம்பர் மாதத்தில் 100 செ.மீ மழை சென்னையில் பதிவாகியுள்ளது. இது கடந்த 100 ஆண்டுகளில் மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை 10 மணி வரை 23 மாவட்டங்களில் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நேற்று அளித்த பேட்டியில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (நவம்பர் 28) வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ’ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும்,
மற்ற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (நவம்பர் 29) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நேற்று அளித்த பேட்டியில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (நவம்பர் 28) வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ’ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும்,
மற்ற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (நவம்பர் 29) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.