ஆப்நகரம்

தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களிலும் தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 7 Nov 2018, 4:50 pm
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களிலும் தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன மழை பெய்யக்கூடும் என்றுஇந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil 71489-klgwvidznp-1508409046


வடகிழக்கு பருவ மழை நவம்பர் 1 தேதி தொடங்கியபோது, மழை தொடர்ந்து பெய்யவில்லை. இந்நிலையில் நேற்று இலங்கையை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்க கடல் பகுதியில் உருவானஆழ்ந்தகாற்றழுத்ததாழ்வு பகுதி இந்தியப் பெருங்கடல்மற்றும் குமரி கடல் வரை பரவியது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துமேற்குதிசையில் கன்னியாகுமரியை கடந்துசெல்லும் என்றுஇந்திய வானிலை ஆய்வு மையம்அறிவித்துள்ளது.

இதன் காரணமாகஅடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழக கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் ஒரு சில இடங்களில் குறைவானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களிலும் தென் தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் அந்தமான் கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிதாக ஒரு காற்றழுத்ததாழ்வு பகுதி உருவாகும் என்று அறிவிக்கப்படுள்ளது.

அடுத்த செய்தி