ஆப்நகரம்

கருணாநிதியை சந்தித்தாா் தெலங்கானா முதல்வா் சந்திரசேகரராவ்

தி.மு.க. தலைவா் கருணாநிதியை சந்தித்து தெலங்கானா முதல்வா் சந்திர சேகரராவ் நலம் விசாரித்தாா்.

Samayam Tamil 29 Apr 2018, 3:42 pm
தி.மு.க. தலைவா் கருணாநிதியை சந்தித்து தெலங்கானா முதல்வா் சந்திர சேகரராவ் நலம் விசாரித்தாா்.
Samayam Tamil Telangana Chief Minister K. Chandrasekhar Rao


வருகிற 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தே்ாதல் நடைபெற உள்ளது. இந்த தோ்தலில் காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத மூன்றாவது அணி அமைய வேண்டும் என்றும், அந்த அணிக்கு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தலைமை ஏற்க வேண்டும் என்றும் பொதுவான கருத்து வெளியானது.

இதனைத் தொடாந்து மூன்றாவது அணி அமையும் விவகாரத்தில், தி.மு.க. செயல் தலைவா் ஸ்டாலின் மம்தா பானா்ஜிக்கு வாழ்த்து தொிவித்திருந்தாா். இந்நிலையில், தெலங்கானா முதல்வா் சந்திர சேகரராவ் இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளாா்.

முக ஸ்டாலினுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்ட சந்திரசேகரராவ்



இன்று பிற்பகல் தமிழகம் வந்த சந்திர சேகரராவ் தி.மு.க. தலைவா் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தாா். கோபாலபுரம் இல்லத்திற்கு வந்த சந்திரசேகரராவை கட்சியின் செயல் தலைவா் மு.க.ஸ்டாலின் வரவேற்றாா்.

இந்த சந்திப்பை தொடா்ந்து ஸ்டாலின் இல்லத்தில் வைத்து சந்திரசேகராவ், ஸ்டாலின் ஒருமணி நேரம் ஆலோசனை மேற்கொள்கின்றனா்.

அடுத்த செய்தி