ஆப்நகரம்

சந்திரயான்-2 2018-க்குள் ஏவப்படும்: மயில்சாமி அண்ணாதுரை உறுதி!

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய மயில்சாமி அண்ணாதுரை 'சந்திரயான்-2 செயற்கைகோள் 2018-ற்குள் ஏவப்படும்' என தெரிவித்தார்.

TOI Contributor 21 Jul 2017, 1:42 pm
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய மயில்சாமி அண்ணாதுரை 'சந்திரயான்-2 செயற்கைகோள் 2018-ற்குள் ஏவப்படும்' என தெரிவித்தார்.
Samayam Tamil chandrayaan ii satellite will be launched by 2018
சந்திரயான்-2 2018-க்குள் ஏவப்படும்: மயில்சாமி அண்ணாதுரை உறுதி!


இஸ்ரோ மைய இயக்குனர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, காலை ராமேசுவரம் வந்தார். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டுக்கு சென்றார். அவரது அண்ணன் முகமது மரக்காயரை சந்தித்தார்.

பின் மணி மண்டபம் சென்ற மயில்சாமி அண்ணாதுரை, அப்துல் கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற மயில்சாமி அண்ணாதுரை கூறுகையில்,’
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மிகச்சிறந்த மனிதர். இந்தியா மட்டுமல்லாமல் உலக மக்களிடம் ஒரு அடையாளமாக திகழ்ந்தவர். அவர் பிறந்த ஊரில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்தது.

அவரது ஆசைப்படி கடந்த இரண்டு மாதங்களில் 14 செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. சந்திரயான்-2 செயற்கைகோள் 2018-ம் ஆண்டுக்குள் விண்ணில் ஏவப்படும். அடுத்த கட்டமாக மங்கள்யான்-2 ஏவ பணிகள் நடந்து வருகின்றன.’ என்றார்.

Chandrayaan-II satellite will be launched by 2018

அடுத்த செய்தி