ஆப்நகரம்

ரேசன் கார்டில் திருத்தம் செய்ய இன்று சிறப்பு முகாம்

ரேசன் கார்டில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்ட முகாம் இன்று (சனிக்கிழமை) நடைப்பெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 13 May 2017, 5:57 am
சென்னை : ரேசன் கார்டில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்ட முகாம் இன்று (சனிக்கிழமை) நடைப்பெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
Samayam Tamil changes in ration card today special camp
ரேசன் கார்டில் திருத்தம் செய்ய இன்று சிறப்பு முகாம்



குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்ட முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

அதன்படி உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, சென்னையில் 17 மண்டலங்களில் மக்களின் குறைகளை கேட்டு தீர்வு காணும் பொருட்டு மே 2017 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்ட முகாம் அந்தந்த மண்டல உதவி ஆணையர் அலுவலகத்திலேயே 13.05.2017 அன்று காலை 10.00 மணி முதல் 05.00 மணி வரை நடைபெறவுள்ளது.

குடும்ப அட்டைதாரர்கள் குடும்ப அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் பொது விநியோக திட்ட பொருள்கள் கிடைப்பது குறித்தும் தனியார் துறையில் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகள் வாங்கும் நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவது அல்லது குறைகள் இருப்பது குறித்தும் தங்களுக்கு குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை இக்கூட்டத்தில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சென்னையில் உள்ள 17 மண்டல பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

changes in ration card : today special camp

அடுத்த செய்தி