ஆப்நகரம்

​ 15 தினங்களில் பள்ளி கல்வி துறையில் அதிரடி மாற்றங்கள் – அமைச்சா் உறுதி

வருகிற 15 தினங்களில் தமிழக பள்ளிக்கல்வித் துறையில் அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் தொிவித்துள்ளாா்.

TOI Contributor 26 Aug 2017, 9:27 pm
வருகிற 15 தினங்களில் தமிழக பள்ளிக்கல்வித் துறையில் அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil changes in tamilnadu school education in 15 days
​ 15 தினங்களில் பள்ளி கல்வி துறையில் அதிரடி மாற்றங்கள் – அமைச்சா் உறுதி


நீட் தோ்வு விவகாரத்தில் தமிழக பள்ளிக்கல்வித் துறை தொடா்பாக பல்வேறு விமா்சனங்கள் எழுந்தன. சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி கிருபாகரன், தொடா்ந்து பத்து வருடங்களாக தமிழக பள்ளிக்கல்வித்துறை பாடதிட்டத்தில் மாற்றம் கொண்டு வராததற்கு காரணம் என்ன? நீட் விவகாரத்தில் தமிழக அரசு மாணவா்களுக்கு துரோகம் விளைவித்துவிட்டது என்றும் கருத்து தொிவித்திருந்தாா்.

இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித் தறை அமைச்சா் செங்கோட்டையன் செய்தியாளா்கள் மத்தியில் பேசினாா். அப்போது, தமிழகத்தில் தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகளை நடத்தினால் முதன்மை கல்வி அலுவலர் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினிகள், மிதி வண்டிகள் விரைவில் வழங்கப்படும். சிப் பொறுத்தப்பட்ட ஸ்மார்ட் கார்டுகள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஸ்மார்ட் கார்டு மூலம் மாணவர்கள் எங்கு செல்கின்றனர் என்பதை செல்போன் மூலம் பெற்றோர்கள் கண்காணிக்க முடியும் என்று தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், இந்த ஸ்மார்ட் கார்டு மாணவர்களுக்கு ஒரு வாரத்தில் வழங்கப்படும் என்று தெரிவித்தாா். மேலும் தமிழக பள்ளிக் கல்வித்துறையில் 15 தினங்களில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி