ஆப்நகரம்

மத்திய அமைச்சர் மீது காலணி வீச்சு!

மத்திய அமைச்சர் மீது காலணி வீச்சு!

TOI Contributor 16 Mar 2017, 10:23 am
மாணவர் முத்துக்கிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ அமைப்பினர் அவர் மீது காலணி வீசியுள்ளனர்.
Samayam Tamil chappel thrown on minster pon radhakrishnanar
மத்திய அமைச்சர் மீது காலணி வீச்சு!


டெல்லி ஜேன்யுவில் தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படும் மாணவர் முத்துகிருஷ்ணனின் உடல் அவரது சொந்த ஊரான சேலத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அவருக்கு அஞ்சலி செலுத்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் மாணவர் அமைப்பினர் திரண்டுள்ளனர். மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் மாணவர் முத்துக்கிருஷ்ணனுக்கு அஞ்சலி செலுத்த சேலம் வந்திருந்தார்.

அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்திக்கும் போது மாணவர் அமைப்பை சேர்ந்த மாணவர் ஒருவர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது செருப்பை வீசியுள்ளார். இதனால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்கள் உயிரிழப்பிற்கு மத்திய அரசு தான் காரணம் என்று தொடர்ந்து மாணவ அமைப்பினர் என்று குற்றம் சாட்டிவந்த நிலையில், பொன்.ராதாகிருஷ்ணனின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காலணி வீசப்பட்டுள்ளது. காலணி வீசிய மாணவரை காவல்கள் அழைத்து சென்றனர். தொடர்ந்து மாணவ அமைப்பினரும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்களும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

அடுத்த செய்தி