ஆப்நகரம்

சுவாதி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னையை உலுக்கிய சுவாதி கொலை வழக்கு தொடர்பாக நுங்கம்பாக்கம் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

TNN 8 Jan 2017, 5:56 pm
சென்னை: சென்னையை உலுக்கிய சுவாதி கொலை வழக்கு தொடர்பாக நுங்கம்பாக்கம் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
Samayam Tamil charge sheet filed in swathi murder case
சுவாதி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்


சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொருள் பொறியாளரான சுவாதி என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கைது நடவடிக்கையின் போது தற்கொலை செய்து கொள்ள முயன்ற அவருக்கு நெல்லையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் சென்னை கொண்டு வரப்பட்டார். தொடர்ந்து, நீதிமன்றக் காவலில், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார்.

இந்நிலையில், சுவாதி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராம்குமாரை தவிர வேறு யார் மீதும் குற்றம் சாட்டப்படவில்லை என நுங்கம்பாக்கம் போலீசார் அளித்துள்ள குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே, இத்தோடு விரைவில் சுவாதி கொலை வழக்கு மூடப்படும் என்றும் தெரிகிறது.
Charge sheet filed in swathi murder case

அடுத்த செய்தி