ஆப்நகரம்

கொரோனா எச்சரிக்கை: அனைத்து கோயில்களுக்கும் அறநிலையத்துறை கட்டுப்பாடு விதிப்பு

கொரோனா பரவல் எச்சரிக்கையாக கோயில்களுக்கு அறநிலையத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.

Samayam Tamil 22 Mar 2021, 7:10 pm
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் புதிதாக 1,289 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,66,982 ஆக அதிகரித்துள்ளது.
Samayam Tamil file pic


சென்னையில் மட்டும் நேற்று 466 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 241623 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், கோயில்களில் பங்குனி மாத திருவிழா மற்றும் சிறப்பு பூஜைகளில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு அறநிலையத்துறை கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அது தொடர்பான சுற்றறிக்கையில், ''கோவிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும். அத்துடன் கோயில் வளாகத்தில் கைகளை சுத்திகரிக்க கிருமிநாசினி வழங்க வேண்டும். பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை கோவிலுக்கு வருவதை பாதுகாப்பு கருதி தவிர்க்க அறிவுறுத்தலாம்.

அடுத்தது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? ஓபிஎஸ் பேசினால் முதல்வர் ஓகே சொல்வாரா?

கோவிலுக்குள் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே வரிசையில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும். பக்தர்கள் கோவிலுக்குள் தேங்காய், பழம் போன்றவற்றை கொண்டு வந்து அர்ச்சனை செய்வதை தவிர்க்கலாம். அதேபோல, பிரசாதம் மற்றும் தீர்த்தம் விநியோகத்தையும் தவிர்க்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி