ஆப்நகரம்

கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை கட்டுவதை நிறுத்த வேண்டும் - முதல்வர் கடிதம்

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை நிறுத்த வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.

TNN 18 Jun 2017, 12:34 pm
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை நிறுத்த வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
Samayam Tamil check dam across the kosasthalaiyar river edappadi palanisamy letter to chandrababu naidu
கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை கட்டுவதை நிறுத்த வேண்டும் - முதல்வர் கடிதம்


கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவதால், தமிழகத்திற்கு வரும் தண்ணீர் தடுத்து நிறுத்தப்படும், இதனால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என கூறி தடுப்பணை கட்டுவதை நிறுத்த வேண்டும் என தமிழக விவசாயிகள் கூறியிருந்தார்கள்.

இதையடுத்து இரு மாநில அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் தடுப்பணை கட்டுவதை தற்காலிகமாக ஆந்திர அரசு நிறுத்தி வைத்தது. இதன் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை வரும் 19ம் தேதி நடைப்பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.

அடுத்த செய்தி