ஆப்நகரம்

பவானி ஆற்றில் அணை கட்டும் கேரளா: பினராயி விஜயனுடன் ஓபிஎஸ் பேச்சு நடத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டுவது தொடர்பாக, அம்மாநில முதலமைச்சருடன் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

TNN 18 Jan 2017, 7:52 pm
பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டுவது தொடர்பாக, அம்மாநில முதலமைச்சருடன் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil check dams across bhavani river stalin asks panneerselvam to speak to kerala cm
பவானி ஆற்றில் அணை கட்டும் கேரளா: பினராயி விஜயனுடன் ஓபிஎஸ் பேச்சு நடத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக மேலும் கூறியதாவது:

தமிழகத்தின் கொங்கு மண்டலத்திற்கு முக்கிய நீராராதரமாக உள்ள பவானி ஆற்றின் குறுக்கே கேரள எல்லைக்குட்பட்ட பகுதிகளில், 2 இடங்களில் அணை கட்ட, அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே, கடந்த 2002ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தின்போது, கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கைவிடச் செய்யப்பட்டது.

ஆனால், தற்போது மீண்டும் அணை கட்டும் பணிகளை கேரளா தொடங்கியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. உடனடியாக, தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த விவகாரத்தில் தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

DMK on Wednesday asked Tamil Nadu chief minister O Panneerselvam to speak to Kerala chief minister Pinarayi Vijayan and stop construction of check dams across Bhavani river.

அடுத்த செய்தி