ஆப்நகரம்

செங்கல்பட்டில் மீண்டும் சுங்கக் கட்டணம்: விழி பிதுங்கும் வாகன ஓட்டிகள்!

செங்கல்பட்டு சுற்று வட்டாரத்தில் மீண்டும் சுங்கக் கட்டணம் வசூல் தொடங்கியுள்ளது.

Samayam Tamil 20 May 2020, 9:48 am
கொரோனா ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாத இறுதியிலிருந்து சுமார் இரண்டு மாத காலமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil செங்கல்பட்டில் மீண்டும் சுங்கக் கட்டணம்


அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வாகனங்கள் சென்று வந்த நிலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஏப்ரல் 20ஆம் தேதி முதல் நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இருப்பினும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் தேங்கி நிற்கும் சூழல் நிலவியதால் மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் பரனூர், ஆத்தூர் சுங்கச் சாவடிகளிலும், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள உத்தண்டி, வெங்கம்பாக்கம், பூஞ்சேரி ஆகிய இடங்களில் சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று நள்ளிரவு முதல் மேற்சொன்ன சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் வசூலிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா: வேகமெடுக்கும் பாதிப்பு, என்ன செய்யப் போகிறது தமிழகம்?

நான்காம் கட்ட ஊரடங்கில் பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் மாவட்டங்களுக்குள் சென்றுவர பிற வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே தற்போது வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் சுங்கக் கட்டணம் வசூல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

ஜூன் 1ஆம் தேதி முதல் ரயில்கள் இயக்கம் - ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் தகவல்!

கடந்த ஜனவரி 26ஆம் தேதி பரனூர் சுங்கச் சாவடியில் நடைபெற்ற மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது அது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி