ஆப்நகரம்

புல்வாமா பயங்கரவாத தாக்குதல்: ராணுவ வீரர்களுக்கு செங்கல்பட்டில் அஞ்சலி

புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப் ராணுவ வீரர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த அஞ்சூர் புதிய கிராம மக்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Samayam Tamil 17 Feb 2019, 2:54 pm
புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப் ராணுவ வீரர்களுக்குகாஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த அஞ்சூர் புதிய கிராம மக்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
Samayam Tamil salbn


ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் பிப்ரவரி 14-ஆம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-ஏ- முகமது பயங்கரவாத அமைப்பினர் மேற்கொண்ட தற்கொலைப் படைத் தாக்குதலில், 40-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.அவர்களுக்குஅஞ்சூர் கிராமத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அஞ்சூர் கிராம இளைஞர்கள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏராளமான கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டு ஊர்வலமாக சென்று ராணுவ வீரர்களின் உருவப் படங்களுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அரசியல் கட்சி பிரமுகர்கள், இளைஞர்கள் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்

அடுத்த செய்தி