ஆப்நகரம்

செங்கல்பட்டு இளம்பெண் தற்கொலை: தேடப்பட்டு வந்த முக்கிய நபர் சரண்

செங்கல்பட்டு இளம்பெண் தற்கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த புருஷோத்தமன் மதுராந்தகம் டிஎஸ்பி அலுவலகத்தில் சரணடைந்துள்ளார்

Samayam Tamil 5 Jul 2020, 3:00 pm
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த நைனார் குப்பத்தில் கடந்த 24 ஆம் தேதி சசிகலா என்ற பெண் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் உடலை கைபற்றி தற்கொலை வழக்காக போலீசார் பதிவு செய்தனர். பிரேதப்பரிசோதனை முடிந்த நிலையில், சசிகலாவின் மூத்த சகோதரர் அருன் பாபு, தனது தங்கை தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும், அவரை கொலை செய்து திமுக நிர்வாகிகள் தேவேந்திரன், அவரது சகோதரர் புருஷோத்தமன் ஆகியோர் தூக்கில் தொங்க விட்டதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
Samayam Tamil புருஷோத்தமன்
புருஷோத்தமன்


மேலும், சில ஆண்டுகளுக்கு முன்னர் சசிகலாவை தகாத முறையில் வீடியோ எடுத்து தேவேந்திரன், புருஷோத்தமன் ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தங்களடு ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொலை செய்துள்ளனர் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், சசிகலாவின் உடலை மறு பிரேதப்பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தேவேந்திரன், புருஷோத்தமன் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இதனிடையே, தேவேந்திரன் மற்றும் டி.புருஷோத்தமன் ஆகியோரை திமுகவில் இருந்து தற்காலிகமாக தள்ளி வைத்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். கழக கட்டுப்பாட்டை மீறியும், கட்சியின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையிலும் செயல்பட்டாதலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

7 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் கொடுமை - சிக்கிய 65 வயது முதியவர்!

அதேபோல், “செங்கல்பட்டு நைனார்குப்பம் சசிகலாவை தற்கொலைக்கு தூண்டியதாக பதியப்பட்ட வழக்கில் இளைஞரணி நிர்வாகி ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் தீர விசாரிக்கவேண்டும். அவர் குற்றம் செய்திருந்தால் அவரை கைது செய்யும் நடவடிக்கையை திமுக இளைஞரணி வலியுறுத்தும்” என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தேவேந்திரன்


இந்த நிலையில், செங்கல்பட்டு இளம்பெண் சசிகலா தற்கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியாக கருதப்படும் புருஷோத்தமன் மதுராந்தகம் டிஎஸ்பி அலுவலகத்தில் சரணடைந்துள்ளார்.

அடுத்த செய்தி