ஆப்நகரம்

போதை பொருள் வைத்திருந்ததாக 25 பள்ளி மாணவர்கள் பேர் சஸ்பெண்ட்: பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் போதை பொருள் வைத்திருந்தாக 25 தனியார் பள்ளி மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Samayam Tamil 8 Nov 2018, 4:36 am
சென்னையில் போதை பொருள் வைத்திருந்தாக 25 தனியார் பள்ளி மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களின் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Samayam Tamil chennai drug school


சென்னை நீலாங்கரை அருகிலுள்ள தனியார் பள்ள ஒன்றில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பான் போதைப் பொருள் கொண்டு வந்ததாக 25 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பத்து நாட்களுக்கு மேலாகியும் மாணவர்கள் பள்ளிக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில், நேற்று பள்ளிக்கு வந்த மாணவர்களை பள்ளி நிர்வாகம், வெளியே அனுப்பி வெயிலில் நிற்க வைத்தாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து பள்ளிக்கு விரைந்து வந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், பள்ளி ஆசிரியர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த நீலாங்கரை காவல்ஆய்வாளர், இரு தரப்பினரிடையும் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர், மாணவர்கள் வகுப்பறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், ‘அளவுக்கு அதிகமாக கட்டணம் கொடுத்து மாணவர்களை தனியார் பள்ளியில் சேர்க்கின்றோம். ஆனால், பள்ளி நிர்வாகமோ மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாமல் உள்ளது. ஏதாவது ஒரு மாணவர் போதை பொருள் வைத்திருந்திருக்கலாம். அதற்காக ஒட்டு மொத்த மாணவர்களையும் இடைநீக்கம் செய்தது தவறு. மேலும், நாங்கள் பெற்றோர் என்பதையும் மதிக்காமல், ஒருமையில் பேசுகின்றனர். பள்ளிக்கு வந்தால் உட்கார வைக்காமல் அவமரியாதை செய்கின்றனர்.’ இவ்வாறு தெரிவித்தனர்.

அடுத்த செய்தி