ஆப்நகரம்

கத்தியோடு கெத்தா நின்ற 5 பேர்: போலீஸ் பாத்ரூமில் வழுக்கி விழுந்தார்களா..?

சென்னையில், கத்திகளோடு நின்றிருந்த 5 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Samayam Tamil 11 Sep 2019, 4:59 pm
தமிழகத்தில் கத்தியுடன் சுற்றித் திரியும் கலாச்சாரம் ஏதோ கெத்தான விஷயம் போல இளைஞர்கள் மத்தியில் பரவி வருகிறது. தாமதமாக பெட்ரோல் போட வந்த பெட்ரோல் பங்கு ஊழியர் மீது கத்திக் குத்து, கல்லூரியில் 2 தரப்பு கத்தியுடன் மோதன், வாகனத்தை ஓட்டும்போது ஏற்பட்ட சிறு பிரச்சனை காரணமாகக் கத்தியால் குத்தி கொல்லை போன்ற செய்திகள் இப்போதைய நேரத்தில் பரவலாக நாடு முழுவதும் அதிர்வலைகளைக் கிளப்புகிறது. சமூக ஊடகங்களின் தாக்கத்தால், அறம் என்றால் எது எனக் கேட்கும் நிலைக்குச் சென்றுவிட்டோம். இதுபோன்ற செயல்களில் பெரும்பாலும் இளைஞர்களே ஈடுபடுகிறார்கள்.
Samayam Tamil bathroom


இதே வரிசையில் இப்போது மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. தமிழகத்தில் இதுபோன்ற குற்றங்கள் நடப்பதைத் தடுப்பதுக்குத் தமிழக காவல்துறையினர் தொடர்ந்து அதிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாகச் சென்னையில் தொடர்ந்து காவலர்கள் ரோந்து வாகனங்கள் மூலம் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியைக் கண்காணித்து வருகின்றனர். அதேபோல் வாகன சோதனையிலும் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், திருவெற்றியூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் காவல்துறை ரோந்து சென்று கண்காணிப்பில் ஈட்டுப்பட்டிருந்தனர். அப்போது காவல்துறைக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கு மாடவீதியில் சோதனை செய்தனர். அப்போது காவல்துறை வருவதைக் கண்ட 5 பேர் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கத் தொடங்கினர். சுதாரித்துக் கொண்ட காவல்துறை அவர்களை மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தியபோது முரணான பதில்களை அளித்து வந்தனர். இதையடுத்து காவல்துறை அவர்களைச் சோதனை செய்தபோது, அவர்கள் மறைத்து வைத்திருந்த 2 கத்திகளைக் கைப்பற்றினர். இதனடிப்படையில் 5 பேரையும் கைது செய்த காவல்துறை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்டவர்களில் 2 வரை தவிர 3 பேருக்கு வயது 23க்கும் குறைவானது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் விசாரணைக்குப்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், இளைஞர்கள் காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படும்போது அங்கிருக்கும் பாத்ரூமில் வழுக்கி விழுந்து ஒரே மாதிரியாகக் காயமடைவது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில், இந்த 5 பேரும் காவல் நிலையத்தில் உள்ள பாத்ரூமில் வழுக்கி விழுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி