ஆப்நகரம்

இனி 24 மணி நேரமும் சென்னையில் ஆவின் பால் கிடைக்கும்!

சென்னையில் 12 பாலகங்களில் 24 மணி நேரமும் ஆவின் பால் விநியோகம் செய்யப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 21 Apr 2018, 4:48 am
சென்னையில் 12 பாலகங்களில் 24 மணி நேரமும் ஆவின் பால் விநியோகம் செய்யப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil aavin


சென்னை நந்தனத்தில் புதிய நடமாடும் பாலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். புதிய பால்பொருட்கள், பால் கலவை ஐஸ்கிரீம், சர்க்கரை இல்லாத ஐஸ்கிரீம் ஆகியவற்றை அறிமுகம் செய்தார்.
விழாவில் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சென்னை மாநகரில் உள்ள 12 பாலகங்களில் 24 மணிநேரமும் ஆவின் பால் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவித்தார். அதன்படி, பெரம்பூர், அசோக்நகர், வடசென்னை, சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் , மீனம்பாக்கம், மயிலாப்பூர், திருவான்மியூர், தி.நகர், காமராஜர் அரங்கம், அண்ணா நகர், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் 24 மணி நேரமும் ஆவின் பால் கிடைக்கும்.

அடுத்த செய்தி