ஆப்நகரம்

ஊரடங்கு எதற்காக? இன்று கொரோனா வராதா? "பொறுப்பில்லாத ஆட்சியாளர்கள்"

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மக்கள் சுய ஊரடங்கு நேற்று அமலிலிருந்த நிலையில், இன்று மாநிலம் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

Samayam Tamil 23 Mar 2020, 8:48 am
இந்தியா முழுவதையும் மார்ச் 22 ஆம் தேதி முடக்குவதாகப் பிரதமர் மோடி அறிவித்து, அதன்படி நேற்று நாடே முடங்கியிருந்தது. கொரோனா தொற்றை முறியடிக்கும் விதமாக இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது என ஆட்சியாளர்கள் தெரிவித்தனர்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதற்கிடையே தமிழ்நாட்டில் மக்கள் சுய ஊரடங்கு உத்தரவு இன்று காலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நீட்டிப்பு காலை முடிவடைந்த நிலையில் மக்கள் ஆபத்தை உணராமல் கூட்டம் கூட்டமாக வெளியே உலாவத் தொடங்கியுள்ளனர்.

டீ கடைகள், அத்தியாவசிய கடைகள் எனப் பெரிய கடைகள் தவிர்த்துப் பிற கடைகள் திறக்கப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களுக்கு 144 தடை விதிக்கப்பட்ட போதும், காலை முதல் நகரம் இயல்புக்குத் திரும்பியது போல் காட்சியளிக்கிறது.

கொரோனா தொற்று ஆட்சியாளர்களைப் பீதியடையச் செய்துள்ள போதும் மக்கள் அதன் ஆபத்தை உணராமலிருக்கின்றனர். குறிப்பாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்த பொது மக்கள் முந்தி அடித்துக் கொண்டு சண்டை போட்டு பேருந்துகளில் தங்கள் சொந்த ஊருக்குப் புறப்பட வேகம் காட்டி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

கோயம்பேடு காய்கறி சந்தை காலை இயல்புக்குத் திரும்பியது. வெளியூர்களிலிருந்து காய்கறிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. வியாபாரிகள் அதை விற்பதற்கு ஆர்வத்துடன் வாங்கி சென்று வருகின்றனர்.

கோப்புப்படம்


இதற்கிடையே பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்க அறிவுறுத்தியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் தனது மக்களை இழந்து வருவதாக இத்தாலி நாட்டு ஆட்சியாளர்கள் கண்ணீர் விட்டு வேதனை தெரிவித்து வருகின்றனர்.

எனினும் நமது நாட்டி ஒரு நாள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திய மத்திய, மாநில அரசுகள் இன்று மெத்தனப் போக்கைக் கையாள்வது போல் தெரிகிறது. கோயம்பேட்டில் இப்போது இருக்கும் நிலவரத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட ஒருவர் பேருந்து நிலையத்திற்கு வந்தால் ஒட்டுமொத்த தமிழ்நாடே சிதைந்துவிடும் என்பதை அறிய முடிகிறது.

கொரோனா வைரஸ்: லாக்-டவுன் ஆகும் சர்வதேச நகரங்கள்!

காலை முதல் சென்னையில் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. அரசு, தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து கொரோனா தொற்று தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியபோதும் மக்களின் இந்த அலட்சியப் போக்கு பேரழிவிற்கு வழி வகுத்து விடலாம். இந்த விடுமுறையை அரசு முன்னெடுத்ததற்குக் காரணம் மக்களின் உயிரைப் பாதுகாக்கவே. அனைவரும் இருக்கும் இடத்தில் பத்திரமாக இருக்கும்படி அரசு அறிவுறுத்திய நிலையில் மக்களின் செயல் அச்சத்தையும் வேதனையும் ஒரு சேர அளிக்கிறது.

இந்த நிலை குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "இதுபோன்ற நேரங்களில் மக்கள் சொந்த ஊருக்குச் சென்று குடும்பத்தோடு இருப்பதையே விரும்புவார்கள். ஆட்சியாளர்கள் சென்னை போன்ற மாவட்டங்களில் பல்வேறு பகுதியிலிருந்து புறநகர் பேருந்துகளை இயக்க்ஃ வழி செய்ய்ஃ வேண்டும். இது நோய் பரவுவதைக் கட்டுக்குள் வைக்க உதவும்" அறிவுரை வழங்குகின்றனர்.

அடுத்த செய்தி