ஆப்நகரம்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசுப்பள்ளி மாணவர்கள் இலவச விமான பயணம்!

அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் விமானத்தில் இலவசமாக பயணம் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Samayam Tamil 14 Nov 2018, 4:27 pm
சென்னையில் குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் விமானத்தில் இலவசமாக பயணம் செய்தனர்.
Samayam Tamil chen
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசுப்பள்ளி மாணவர்கள் இலவச விமான பயணம்!


மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு சென்னை விமான நிலையம், இண்டிகோ ஏர்லைன்ஸ் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் நிறுவனத்துடன் இணைந்து அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ’கனவு பயணம்’ என்ற இலவச விமான பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இதற்காக விமான நிலையம் அருகே உள்ள அரசுப்பள்ளிகளில் இருந்து 48 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர்.

இதையடுத்து காலை 9.45 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சி புறப்பட்டு சென்ற விமானத்தில் மாணவ, மாணவிகள் பயணம் செய்தனர். 45 நிமிடத்தில் திருச்சி விமான நிலைத்தை அடைந்த அவர்கள், மீண்டும் அங்கிருந்து புறப்பட்ட விமானத்தின் மூலம் சென்னை திரும்பினர்.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தின் இந்த 'கனவு பயணம்' முயற்சி அனைவரது மத்தியிலும் பாராட்டை பெற்றுள்ளது.

அடுத்த செய்தி