ஆப்நகரம்

அடிச்சு நொறுக்கப் போகும் கனமழை: தீபாவளியை மழையிலதான் கொண்டாடணும்!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 26 Oct 2019, 1:56 pm
வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்துவரும் நிலையில் சென்னையில் பல இடங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்தது. நுங்கம்பாக்கம், வளசரவாக்கம், குரோம்பேட்டை, கிண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
Samayam Tamil Untitled collage (14)


சூரைக்காற்றில் சிக்கி, 100க்கும் அதிகமான மீனவர்கள் மாயம்!

தீபாவளிப் பண்டிகைக்கு மக்கள் தயாராகிவரும் நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் பல இடங்களில் மழை பெய்துவருகிறது. இந்நிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

உருவானது கியார், வடமாநிலங்களுக்கு தீபாவளி வீட்டில்தான்!

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 4 நாள்களில் மேற்கு, வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதனால் வரும் நாள்களில் தென் தமிழ்நாடு, புதுவை, கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

நாங்க ரெடி; வடகிழக்கு பருவமழையை ஒரு கை பாத்திடலாம்- அமைச்சர் உதயகுமார்!

சென்னை, சென்னைப் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழைபெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் 5 செ.மீ.மழை பதிவாகியுள்ளது.

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதால் மீனவர்கள் தென்மேற்கு வங்ககடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென் தமிழக கடல்ப் பகுதிகளில் இரண்டு நாள்களுக்கு மீன் பிடிக்கச் செல்லவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி