ஆப்நகரம்

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த பெண் காஞ்சிபுரத்தில் எரித்துக் கொலை

காஞ்சிபுரத்தில் எரித்துக் கொல்லப்பட்ட பெண், சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த பொக்கிஷம் என்பது தெரியவந்துள்ளது.

Samayam Tamil 2 Jun 2018, 4:15 pm
காஞ்சிபுரத்தில் எரித்துக் கொல்லப்பட்ட பெண், சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த பொக்கிஷம் என்பது தெரியவந்துள்ளது.
Samayam Tamil man dead


காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் உள்ள பழவேலி பகுதியில் எரிந்த நிலையில் ஒரு பெண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி, , அந்த சடலைத்தை ஆய்வு செய்ததில், கேரளாவில் காணாமல் போன ஜேசாவின் உடலாக இருக்கக்கூடும் என்று சந்தேகம் அடைந்தனர்.

தொடரந்து, கேரள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஜேசாவின் சகோதரருடன் கேரள போலீசார் தமிழகம் வந்தனர். பின்னர், உடலை பார்த்த ஜேசாவின் சகோதரர், அது தனது சகோதரி இல்லை என்று தெரிவித்தார்.

இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண், சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த பொக்கிஷம் என்பது தெரியவந்துள்ளது. அவரை யார் கொலை செய்தார்கள் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி