ஆப்நகரம்

தனியார் செய்தி நிறுவனத்தில் 26 பேருக்கு கொரோனா உறுதி ?

சென்னையைச் சேர்ந்த ஊடக நிறுவனங்களில் 20க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்றூ உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 21 Apr 2020, 3:29 pm
சென்னையில் தனியார் செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 26 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil corona virus


நேற்றைய தினம் சென்னையை சேர்ந்த இரண்டு பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 26 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.

26 பேரும் ஒரே தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிகின்றனர் என்பதோடு, வெவ்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் சிலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், உடன்பணிபுரியும் அனைவருக்கும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இன்று மாலைக்குள் முடிவுகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி