ஆப்நகரம்

சென்னையில் 4வது மாடியில் கிரிக்கெட் விளையாடிய சிறுவன் தவறி விழுந்து பலி

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் கிரிக்கெட் விளையாடிய சிறுவன் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TNN 8 Oct 2017, 2:32 pm
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் கிரிக்கெட் விளையாடிய சிறுவன் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil chennai boy fall and died from 4 floor while playing cricket
சென்னையில் 4வது மாடியில் கிரிக்கெட் விளையாடிய சிறுவன் தவறி விழுந்து பலி


சென்னனை கோயம்பேடு விளையாட்டு நகரைச் சேர்ந்தவர் சிவசங்கரனின் மகன் அகத்தியா(14). தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் அகத்தியா, கிரிக்கெட் பிரியர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று சனிக்கிழமை விடுமுறை என்பதால், தனது நண்பர்களுடன், தான் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 4 வது மாடியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான்.


அப்போது, பந்தை பிடிக்க வேகமாக ஓடிய அகத்தியா, எதிர்பாரதவிதமாக நிலை தடுமாறி, 4வது மாடியில் இருந்து கீழே விழுந்தான்.

இதனால், பதறியடித்த அவனது நண்பர்கள், ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த அகத்தியாவை, மற்றவர்களின் உதவியோடு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


அங்கு சிகிச்சை பலனின்றி அகத்தியா பரிதாபமாக உயிரிழந்தார். கிரிக்கெட் விளையாட்டால், சிறுவன் உயிரிழந்த சம்பவத்தால், அவனது பெற்றோர் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி