ஆப்நகரம்

சென்னையில் மனைவி, குழந்தைகளை கொலை செய்து, தந்தையும் தற்கொலை

சென்னை கொத்தவால் சாவடியில் மனைவி, மகள், மகன் கழுத்தை அறுத்து கொலை செய்து தொழில் அதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 10 Mar 2016, 4:48 pm
சென்னை : சென்னை கொத்தவால் சாவடியில் மனைவி, மகள், மகன் கழுத்தை அறுத்து கொலை செய்து தொழில் அதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil chennai buisnessman suicide after killing his family members
சென்னையில் மனைவி, குழந்தைகளை கொலை செய்து, தந்தையும் தற்கொலை




பாரிமுனை கொத்தவால் சாவடி கோவிந்தப்ப நாயக்கன் தெருவை சேர்ந்தவர் தேவேந்திரகுமார்(48).இவர் பங்குசந்தை வியாபாரம் செய்து வந்திருக்கிறார். எதிர்ப்பார்த்த அளவிற்கு அதில் லாபம் ஈட்டாமல் நஷ்டம் அடைந்திருக்கிறார். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகினார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு அவரது மனைவி தீப்தி (38), செர்பியா(15) மற்றும் மனாஸ்(7) இவர்கள் மூவரையும் ஒன்றன்பின் ஒன்றாக கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.




மேலும் தேவேந்திரகுமார் தனது வீட்டில் உள்ள பீரோவில் கடிதம் ஒன்றை ஒட்டிவைத்துள்ளார். அதில் என் குடும்பத்தை நானே கொல்லப்போகிறேன் இதற்கு நானே பொறுப்பு . வேறு யாரும் காரணம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.



பின்னர் கொத்தவால் சாவடி போலீசார் விரைந்து சென்று 4 பேரின் உடலையும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அடுத்த செய்தி