ஆப்நகரம்

கனல் கண்ணனை தூக்கிய போலீஸ்: நீதிபதி முன் ஆஜர்படுத்த தீவிரம்!

சென்னை மத்திய குற்றப் பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் கனல் கண்ணனை கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 15 Aug 2022, 10:56 am
சென்னை, மதுரவாயல் பகுதியில், இந்து முன்னணி சார்பில், இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரப் பயணம் நிறைவு விழா நடைபெற்றது.
Samayam Tamil kanal kannan


இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல தமிழ் திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசினார். அப்போது அவர், தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே கனல் கண்ணன், பெரியார் குறித்து அவதூறாக பேசும் விடியோ காட்சி, சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில், இது தொடர்பாக தந்தை பெரியார் திராவிட கழக சென்னை மாவட்ட செயலாளர் குமரன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை கனல் கண்ணன் பெரியார் குறித்து அவதூறாக பேசியது குறித்து புகார் அளித்தார்.
தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயருமா? அமைச்சர் சொன்ன பதில்!
போலீஸ் தேடுவதை அறிந்து தலைமறைவான கனல் கண்ணன் புதுச்சேரியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்த நிலையில் சென்னை மத்திய குற்றப் பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் புதுச்சேரி சென்று அவரை செய்துள்ளனர்.

சென்னைக்கு அவரை அழைத்து வருகின்றனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று நீதிமன்றம் விடுமுறை என்பதால் நீதிபதியின் வீட்டில் அவரை ஆஜர் படுத்த உள்ளனர்.

அடுத்த செய்தி