ஆப்நகரம்

எடப்பாடி பழனிசாமியே முதலமைச்சராக இருக்க வேண்டும்: சரோஜாதேவி!

சென்னை: எப்போதும் எடப்பாடி பழனிசாமியே முதலமைச்சராக இருக்க வேண்டும் என கடவுளை வேண்டுவதாக நடிகை சரோஜாதேவி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 19 Dec 2018, 1:36 pm
சென்னை: எப்போதும் எடப்பாடி பழனிசாமியே முதலமைச்சராக இருக்க வேண்டும் என கடவுளை வேண்டுவதாக நடிகை சரோஜாதேவி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil எடப்பாடி பழனிசாமி


சென்னையில் 14வது திருவையாறு நிகழ்ச்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். தமிழக முதல்வர் இந்த நிகழ்ச்சியை துவக்கி வைப்பது இதுவே முதல்முறையாகும். இந்நிகழ்ச்சியில் எம்.எஸ்.விஸ்வாநாதனின் மெழுகு சிலையை முதல்வர் திறந்து வைத்தார்.

அதில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கூறுகையில், ‘உடல், மனதை வளப்படுத்துவது இசை , நாட்டுப்பற்றை வளர்க்கவும், கொள்கைகளை கொண்டு சேர்க்கவும் இசை உதவுகிறது. இசையை அடுத்த தலைமுறைக்கு கடத்த உதவும் இசைக்கலைஞர்களுக்கு நன்றி.
எம்.ஜி.ஆர்., போல சிரித்த முகம்:
இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய நடிகை சரோஜாதேவி, ‘எத்தனை முதலல்வர்களை நான் பார்த்திருக்கிறேன். தற்போதைய முதல்வர் முகத்தில் நல்ல புன்னகை உள்ளது. கலைஞர்களுக்கு கவுரவம் கொடுக்கும் நல்ல எண்ணம் உள்ளது. எடப்பாடி பழனிசாமி, நிறைய ஏழைகளுக்கு எம்.ஜி.ஆர் போல உதவி செய்ய வேண்டும். எப்போதும் எடப்பாடி பழனிசாமியே முதலமைச்சராக இருக்க கடவுளை வேண்டிக்கொள்கிறேன்” என்றார்.

அடுத்த செய்தி