ஆப்நகரம்

சென்னை கமிஷனர் ஷங்கர் ஜிவாலுக்கு நெஞ்சுவலி: அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

சென்னை மாநகர காவல் ஆணையர் ஷங்கர் ஜிவால் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 14 Oct 2021, 6:02 pm
சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று கமிஷனர் ஷங்கர் ஜிவால் வழக்கம்போல அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு அலுவலக பணியில் இருந்துள்ளார். அப்போது அவருக்கு திடீர் உடலநலக்குறைவு ஏற்பட்டு பாதுகாப்பு காவலர்கள் அவரை சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
Samayam Tamil கோப்புப்படம்


அங்கு பரிசோதித்ததில், ஷங்கர் ஜிவாலுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறிய நிலையில் தொடர்ந்து அவருக்கு அவரச சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து சில மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் இடமாற்ற உத்தரவுகளையும், பணி ஆணையும் வழங்கப்பட்டது.

அந்த வகையில், அப்போதைய சென்னை மாநகர காவல் ஆணையரான மகேஷ் குமார் அகர்வாலுக்கு பதிலாக ஷங்கர் ஜிவால் புதிய சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். சென்னையில் சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததுடன், விடுமுறை நாட்களிலும் அலுவலக பணிகளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஓட்டுகள் விஜய் மக்கள் இயக்கத்துக்கே விழும்..! திமுகவை அச்சுறுத்தும் வாக்காளர்கள்?

1990-ம் ஆண்டு ஐபிஎஸ் பயிற்சி முடித்தவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு கடந்த ஆறு ஆண்டுகளாக அங்கு சிறப்பு அதிரடிப்படைக்கு தலைமை தாங்கியும் உள்ளார். இந்நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு மேலாக சென்னை கமிஷனர் பணியில் இருந்து வரும் நிலையில் திடீர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அடுத்த செய்தி