ஆப்நகரம்

சென்னை கூவம் ஓரம் வடியும் கண்ணீர், பறிபோகும் வாழ்வாதாரம்: மே பதினேழு இயக்கம் எதிர்ப்பு

காந்திநகர் பகுதியில் கூவம் ஆற்றங்கரையோரம் வசிக்கும் குடிசை வாழ் மக்களை அரசு அதிகாரிகள் அப்புறப்படுத்துவதை மே பதினேழு இயக்கம் கண்டித்துள்ளது.

Samayam Tamil 11 Dec 2020, 3:18 pm
சென்னை தீவுத்திடல் அருகே காந்திநகர் பகுதியில் கூவம் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தும் செயலை கண்டித்து மே பதினேழு இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையில், '' சென்னை தீவுத்திடல் அருகே காந்திநகர் பகுதியில் கூவம் ஆற்றங்கரையோரம் வசிக்கும் சென்னையின் பூர்வகுடி மக்களை அப்புறப்படுத்தும் வேலையை அதிமுக அரசு செய்து வருகிறது. தலைமுறை தலைமுறையாக நெடுங்காலமாக வசித்து வரும் இப்பகுதி மக்கள், அரசின் இந்த செயலுக்கு மிகக்கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.
Samayam Tamil chennai riverside communities


இப்பகுதி வாழ் மக்கள் அப்புறப்படுத்தப்படுவதால், அவர்களின் வாழ்வாதாரம் மிகக்கடுமையாக பாதிக்கப்படும். ஆனால் அரசோ, சென்னையை அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில் சென்னையின் மையப்பகுதியில் வசிக்கும் பூர்வகுடி மக்களை சென்னையை விட்டு வெளியே அப்புறப்படுத்தும் வேலையை சிலரின் நலனுக்காக மேற்கொள்கிறது. இதனால் சென்னை வசிக்க ஏழை எளிய பூர்வகுடி மக்களுக்கு தகுதியில்லை என்னும் நிலையை அரசு ஏற்படுத்தியுள்ளது.


அரசின் இச்செயலை கண்டித்து, அப்பகுதி மக்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக மே பதினேழு இயக்கத் தோழர்கள் இன்று நேரில் சென்றனர். ஆனால், தோழர்களை அப்பகுதிக்குள்ளே செல்ல அனுமதி மறுத்ததோடு, காவல்துறையினர் மிக அராஜகமாக நடந்துகொண்டு தோழர்களை கைது செய்து செய்தனர்.

முதல்வர் தனது பதவியை இதை வைத்துத்தான் காக்கிறார்: கனிமொழி!

தோழர்கள் தற்போது கைது செய்யப்பட்டது எழும்பூர் வீரபத்திரன் தெருவில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். கவல்துறையினரின் இந்த அராஜக போக்கை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவளிப்பது என்பது அடிப்படை ஜனநாயக செயலாகும். மக்களின் மீதான அடக்குமுறையை உடனடியாக நிறுத்தி, கைது செய்யப்பட்ட தோழர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது'' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி