ஆப்நகரம்

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,162 பேருக்கு கொரோனா..! 11 பேர் பலி...

சென்னையில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மூன்று இலக்கு எண்களை கடந்து வரும் நிலையில், இன்றும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Samayam Tamil 1 Jun 2020, 7:25 pm
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு நிலவரத்தை குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் இன்று மேலும் 1162 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதோடு மற்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 49 பேருக்கு தொற்று என மொத்தம் இன்று 1162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழக பாதிப்பு எண்ணிக்கையானது 23,495 ஆக அதிகரித்துள்ளது.
Samayam Tamil corona in tamil nadu


தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மேலும் 413 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,170 ஆக உயர்ந்துள்ளது. இன்றும் அதிகபட்சமாக சிகிச்சையில் இருந்த 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகையால் இதுவரை பலியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது.


சென்னையில் அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் 967 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 15,770 ஆக அதிகரித்துள்ளது. இரண்டாவதாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 1223 பேரும், அடுத்தபடியாக திருவள்ளூரில் 981 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்துக்கு முன்பு ஓடிவந்த மனநலம் பாதித்த பெண்..! அடுத்து நிகழ்ந்த அதிர்ச்சி...

சென்னையில் மட்டும் இதுவரை 138 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 7450 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகம் முழுக்க சிகிச்சையிலும், தனிமைப்படுத்தப்பட்டும் மொத்தம் 10,138 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி