ஆப்நகரம்

ரஜினி இ பாஸ் வாங்கினார், ஆனா எங்கட்ட இல்ல: மாநகராட்சி ஆணையர்!

ரஜினிகாந்த் இ பாஸ் விவகாரம் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 29 Jul 2020, 6:33 am
கொரோனாவுக்கான தடுப்பு மருந்து இந்த ஆண்டுக்குள் கிடைக்குமா, கிடைக்காதா என்ற கேள்வியைவிட சமீப நாள்களாக மற்றொரு கேள்வி சமூக வலைதளங்களில் அதிகமாக எழுப்பப்பட்டு வந்தது. ரஜினிகாந்த் இ பாஸ் வாங்கினாரா, இல்லையா என்பதுதான் அது.
Samayam Tamil rajinikanth e pass


ஜூலை 20ஆம் தேதி அவர் தனது சொகுசு காரில் மாஸ்க் அணிந்து பயணம் செய்வதாக ஒரு புகைப்படம் வெளியானது. இந்நிலையில் ரஜினிகாந்த் எங்கு சென்றார், இ பாஸ் வாங்கிச் சென்றாரா, இல்லையா என்ற கேள்விகள் எழுந்தன.

இந்த பரபரப்பு இருந்த சூழ்நிலையில் ஜூலை 23ஆம் தேதி அவர் கேளம்பாக்கம் சென்று திரும்புவதற்கான இ பாஸ் சமூக வலைதளங்களில் பரவியது. 20ஆம் தேதி புகைப்படம் பரவிய நிலையில் 23ஆம் தேதி சென்று வந்ததாக கூறும் இ பாஸ் குறித்து சர்ச்சை எழுந்தது.

ஒரே மீன், ஓஹோன்னு வாழ்க்கை - லட்ச லட்சமாய் பணத்தை அள்ளிய மீனவர்கள்!

இந்நிலையில் செய்தியாளர்கள் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் ரஜினிகாந்த் இ பாஸ் பெற்றது உண்மை தானா எனக் கேள்விகள் எழுப்பினர். அப்போது அவர் அதுகுறித்து ஆய்வு செய்து வருவதாக கூறினார்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பிரகாஷ், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

“சென்னையில், ஜூன் 19ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட முழு பொது முடக்கம் காரணமாகவும், பரிசோதனையை 3 மடங்கு அதிகப்படுத்தியதன் காரணமாகவும் கொரோனா தொற்று குறைந்துள்ளது. தினசரி 12 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை சென்னையில் 23 ஆயிரம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.

ஒருபக்கம் மழை, மறுபக்கம் வனவிலங்குகள், நடுவே ஆன்லைன் கிளாஸ் - பதற்றத்தில் மாணவர்கள்!

ரஜினிகாந்த் இ பாஸ் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “இறப்பு மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு செல்வோருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இ பாஸ் வழங்கப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து ரஜினிகாந்த் இ பாஸ் வாங்கி காரில் பயணம் செய்தது ஆய்வில் தெரியவந்துள்ளது” என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி