ஆப்நகரம்

கொரோனா : சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையா?

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக. சென்னை மாநகருக்கு லெட் அலர்ட் எச்சரிக்கை விடுப்படவுள்ளதாக வெளியான தகவல் குறித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 30 Mar 2020, 7:58 pm
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி மொத்தம் 67 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 25 -க்கும் மேற்பட்டவர்கள் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
Samayam Tamil GCC


கொரோனாவால் சென்னை மாநகருக்கு உள்ள அபாயத்தை கருத்தில் கொண்டுதான், மத்திய உள்துறை அமைச்சர் இரண்டு வாரங்களுக்கு முன்பே சென்னை மாவட்டம் தனிமைப்படுத்தப்படுவதாக அறிவித்திருந்தது.

சென்னை மாவட்டத்துடன் சேர்த்து, காஞ்சிபுரம், ஈரோடு என்று தமிழகத்தில் மூன்று மாவட்டங்கள் முடக்கப்படுவதாக மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

Corona in Chennai: செவிலியர்கள் தங்கிக்கொள்ளட்டும்... தனது வீடுகளைக் கொடுத்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்

இந்த நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க, சென்னையின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, சென்னை மாநகருக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படவுள்ளதாக சமூக வலைதளங்களில் தற்போது தகவல் பரவி வருகிறது.

சென்னை மாநகரவாசிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள இந்த தகவல் குறித்து மாநகராட்சி நிர்வாகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.

அதில், "சென்னையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர்களின் வசிப்பிடங்கள் அமைந்துள்ள அரும்பாக்கம், புரசைவாக்கம், சாந்தோம், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், போரூர், ஆலந்தூர், கோட்டூர்புரம் ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அந்தப் பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும்.
மற்றப்படி, சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகம், எந்தப் பகுதிக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கவில்லை. எனவே பொதுமக்கள் இதுகுறித்து அச்சமடைய வேண்டாம்" என்று மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி