ஆப்நகரம்

பயண அனுமதி சீட்டு: சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு!!

அவசர பயண அனுமதி சீட்டு இனி தங்கள் அலுவலகத்தில் வழங்கப்படமாட்டாது என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 2 May 2020, 12:51 am
மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்களுக்காக பொதுமக்களுக்கு இதுநாள்வரை வழங்கப்பட்டுவந்த அவசர பயண அனுமதி சீட்டு தொடர்பாக, சென்னை மாநகராட்சி நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil travel pass


பொதுமுடக்கம் அமலில் உள்ள காலத்தில், முன்கூட்டிய நிச்சயிக்கப்பட்ட திருமணம், அவசர மருத்துவ சிகிச்சை, எதிர்பாராதவிதமாக நிகழும் மரணம் ஆகிய காரணங்களுக்காக மட்டும், வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு அவசர பயண அனுமதி சீட்டை, சென்னை மாநகராட்சி நிர்வாகம் இதுநாள்வரை வழங்கி வந்தது.

அரசின் அறிவுறுத்தலின்படி, இந்த அனுமதி சீட்டு இனி http://tnepass.tnega.org என்ற இணையதளத்தின் மூலம் மாநில E-pass கட்டுப்பாட்டு அறையின் வாயிலாக வழங்கப்படும்.

எனவே, பயண அனுமதி சீட்டு கேட்டு, பொதுமக்கள் யாரும் மாநகராட்சி அலுவலகத்துக்கு இனி நேரில் வரவேண்டாம் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் அமலில் உள்ள பொதுமுடக்கம் மே மாதம் 3 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது. இந்த நிலையில் பொதுமுடக்கத்தை மே 17 ஆம் வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை (மே 1) அதிரடி அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி