தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்ததை எண்ணி மாநில அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் ஆகியவை மிகவும் நிம்மதியாக இருந்தன. ஒரு பக்கம் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில், மறுபுறம் கோவிட்-19 பாதிப்புகள் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன. இந்த சூழலில் அண்டை மாநிலங்களில் நோய் பரவல் அதிகரித்து வருவதைக் கவனத்தில் கொண்டு புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தால் இ-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை நேற்று புதிதாக 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த எண்ணிக்கை 8,55,121ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் 521 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3,997 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்வேறு வழித்தடங்கள் மூலம் இதுவரை 33,52,322 பேர் தமிழகத்திற்குள் நுழைந்துள்ளனர்.
அதில் 7,090 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வரை 1,78,46,391 முறை RT-PCR பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 1,75,29,190 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 251 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
228 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் பலியானதால் மொத்த பலி எண்ணிக்கை 1,878ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 2,36,978 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். அதில் 2,30,936 பேர் குணமடைந்துவிட்டனர். 4,164 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில் நோய் கட்டுப்பாட்டு பகுதி நடைமுறையை மீண்டும் அமல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
அதன்படி, ஒரு தெருவில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தால் அது கட்டுப்பாட்டு பகுதியாக மாறும். அப்பகுதி உரிய தடுப்புகள் வைத்து தனிமைப்படுத்தப்படும் என்று அதிராடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே சென்னை மாநகராட்சியில் வசிக்கும் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதில் 7,090 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வரை 1,78,46,391 முறை RT-PCR பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 1,75,29,190 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 251 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
228 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் பலியானதால் மொத்த பலி எண்ணிக்கை 1,878ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 2,36,978 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். அதில் 2,30,936 பேர் குணமடைந்துவிட்டனர். 4,164 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில் நோய் கட்டுப்பாட்டு பகுதி நடைமுறையை மீண்டும் அமல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
அதன்படி, ஒரு தெருவில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தால் அது கட்டுப்பாட்டு பகுதியாக மாறும். அப்பகுதி உரிய தடுப்புகள் வைத்து தனிமைப்படுத்தப்படும் என்று அதிராடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே சென்னை மாநகராட்சியில் வசிக்கும் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.