ஆப்நகரம்

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநகராட்சிகளில் சென்னைக்கு முதலிடம்- முதல்வர் பழனிசாமி

இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய மாநகராட்சிகளில் சென்னை மாநகராட்சி முதலிடம் பிடித்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Samayam Tamil 29 Jul 2018, 3:28 am
இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய மாநகராட்சிகளில் சென்னை மாநகராட்சி முதலிடம் பிடித்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
Samayam Tamil palanisamy-02-7-1527161493-315820-khaskhabar
பெண்களுக்கு பாதுப்பான மாநகராட்சியில் சென்னைக்கு முதலிடம்- முதல்வர் பழனிசாமி


சேலத்தில் அதிமுக கட்சி அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் அலோசனை கூட்டம் நடைபெற்றது. இத்ல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.

”சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை கட்சியை சார்ந்தவர்கள் மட்டுமே எதிர்க்கிறார்கள். நான் விவசாயி என்பதால், எந்த விதத்திலும் விவசாயம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என கருதுகிறேன்”.

”தமிழகத்திற்கு 40 நான்கு வழிச்சாலைகள் அமைக்க மத்தியரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதில் 19 சாலைகளுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. இதில் 21 சாலைகள் இன்னும் பரிந்துரையில் உள்ளது”.

”என்னுடைய உறவினர் டெண்டரில் ஊழல் செய்ததாக கூறுவது பொய். திமுக தான் ஊழில் திளைத்த கட்சி. தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வருகிறது. மேட்டூர் அணையும் முழுமையாக நிரம்பி உள்ளது”.

”போக்குவரத்து துறையில் முந்தைய அரசு ரூ. 6 கோடி கடனில் விட்டுச்சென்றது. இந்தியாவில் பாதுகாப்பான மாநகராட்சிக்கான பட்டியலில் சென்னை முதலிடத்தில் உள்ளது” என முதல்வர் பழனிசாமி கூட்டத்தில் பேசினார்.

அடுத்த செய்தி