ஆப்நகரம்

சென்னை கோயம்பேட்டில் டெங்கு கொசு ஒழிப்பு பணி!

சென்னை கோயம்பேட்டில் காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பில் டெங்கு கொசு ஒழிப்புப் பணி நடைபெற்றது.

Samayam Tamil 11 Nov 2018, 11:15 pm
சென்னை கோயம்பேட்டில் காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பில் டெங்கு கொசு ஒழிப்புப் பணி நடைபெற்றது.
Samayam Tamil kosu olipu


தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் தீவிரமாக பரவிவரும் நிலையில் இந்த ஆண்டு மட்டும் 30-க்கும் மேற்பட்டோர் இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 4,500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெங்கு பரவுவதை தடுக்கவும், டெங்கு பரவுதற்கு காரணமாக இருக்கும் கொசுப் புழுக்களை ஒழிக்கவும் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. கொசுப் புழுக்கள் உற்பத்தியாகாத வண்ணம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும், நீர் நிலைகளை பராமாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதற்கு ஏதுவாக இருக்கும் சுற்றுப்புறத்தை சீரமைக்காத நிறுவனங்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கொசுப் புழுக்களை ஒழிக்கும் பணி நடைபெற்றது. சுகாதாரத்துறை துணை ஆணையர் மதுசூதன ரெட்டி இந்த பணிகளுக்கு தலைமை தாங்கினார். பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த மாநகராட்சி ஊழியர்கள் கொசுக்களை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டனர். மார்க்கெட்டில் மாநகராட்சி அதிகாரிகள் வந்த போது, மார்கெட்டில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரக்கோரி மாநகராட்சி அதிகாரிகளை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.

அடுத்த செய்தி