ஆப்நகரம்

2 மாதத்தில் திருமணம்... உயிரைப் பறித்த செல்பி...

பட்டாபிராம் அருகே செல்பி மோகத்தால் திருமணமாக இருந்த மணமக்கள் கிணற்றில் விழுந்து மணமகள் உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Samayam Tamil 5 Nov 2019, 12:47 am
சென்னை, ஆவடி அடுத்த பட்டாபிராம் நவஜீவன் நகரை சேர்ந்தவர் தாஸ். இவர் மகன் அப்பு. வயது 24. தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மெர்சிக்கும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்ய முடிவு செய்து சில மாதங்களுக்கு முன் நிச்சயம் செய்யப்பட்டது. வீட்டார் முன்னிலையில் நிச்சயம் நடந்ததையடுத்து, அவ்வப்போது இருவரும் சந்தித்துப் பேசி வந்துள்ளனர்.
Samayam Tamil chennai couple died while taking selfie near well
2 மாதத்தில் திருமணம்... உயிரைப் பறித்த செல்பி...


பெரும்பாலும் இருவரும் வண்டலூர் - மீஞ்சூர் 400 அடி சாலையில் சந்திப்பது வழக்கம். அப்படி இன்று அப்பூவும்,மெர்சியும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். வழியில் முத்தா புதுப்பேட்டை அருகே காண்டிகை கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றைப் பார்த்தனர். பார்த்தவுடன் கிணற்றருகே சென்று செல்பி எடுக்க முடிவு செய்துள்ளனர்.

''சாதியற்று'' வாழ்கிறோம், ''கஷ்டங்கள்'' தீரவில்லை... கலெக்டரிடம் உதவி கேட்டு நிற்கும் கோவை மக்கள்...

அதன்படி அங்குச் சென்று செல்பியும் எடுத்துள்ளனர். ஒருகட்டத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, கால் தவறி மெர்சி கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.அவரை பிடிக்கச் சென்ற போது அப்பூவும் கிணற்றில் விழுந்துள்ளார். அதிர்ச்சியடைந்த அப்பு, மெர்ஸியை காப்பாற்றக் கிணற்றில் குதித்துள்ளார்.
கிணற்றிலிருந்து இருவரின் அலறல் சத்தம் கேட்டு அருகே வயல்வெளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சடகோபன் என்பவர் அப்பூவை காப்பற்றி, பொது மக்கள் உதவியுடன் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையில், மெர்சி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அப்பகுதியினர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

வீரப்பனை சுட்டதற்காக கிடைத்த மெடலை திருடிட்டாங்க... சத்தியமங்கலம் எஸ்.ஐ. சோகம்...



சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி மெர்ஸி உடலை மீட்டனர். சம்பவம் குறித்து முத்தா புதுப்பேட்டைக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் மணமக்கள் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி