ஆப்நகரம்

ஜல்லிக்கட்டு கலவரம்: சென்னையில் 21 பேருக்கு ஜாமீன்!

மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 21 பேருக்கு சென்னை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

TOI Contributor 31 Jan 2017, 12:09 am
சென்னை: மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 21 பேருக்கு சென்னை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
Samayam Tamil chennai court on monday granted bail to 21 persons people who were arrested in jallikattu violence
ஜல்லிக்கட்டு கலவரம்: சென்னையில் 21 பேருக்கு ஜாமீன்!


ஜல்லிக்கட்டு ஆதரவாக சென்னை மெரினாவில் ஒரு வாரமாக போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தின் கடைசி நாள் பெரும் வன்முறையாக வெடித்தது.
இதில் தீயணைப்பு வாகனம், காவல்துறை வாகனம், டாஸ்மாக் கடை ஆகியவை தீ வைத்து எரித்ததாக 21 பேரை அரும்பாக்கம் போலீஸார் கைது செய்தனர்.

இவர்கள் ஜாமீன் கேட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி எம்.நஷீர் அகமது முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பின் 21 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். தவிர, மறு உத்தரவு வரும் வரை காவல் நிலையத்தில் தினமும் நேரில் சென்று கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.


Chennai court on monday granted bail to 21 persons, people who were arrested in Jallikattu violence

அடுத்த செய்தி