ஆப்நகரம்

சென்னையில் விவசாயிகள் ரயில் மறியல் போரட்டம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சென்னையில் உள்ள விவசாயிகள், ரயில் மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர்.

Samayam Tamil 3 Apr 2018, 2:11 pm
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்துசென்னையில் உள்ள விவசாயிகள், ரயில் மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர்.
Samayam Tamil Cauvery



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த காலக்கெடு மார்ச் 29ஆம் தேதியுடன் முடிந்த பின்பும் வாரியத்தை அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது. இதனைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளன.

இதனிடையே, மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை வரும் 9ஆம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மத்திய அரசும் மேலும் 3 மாத அவகாசம் கேட்டும், நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட ஸ்கீம் என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை விளக்கக் கோரியும் மனுத்தாக்கல் செய்திருக்கிறது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில்போரட்டம் நடைபெற்றது. ரயில் மறியலில் ஈடுபட்ட திமுகவினர் மற்றும் இன்று பல ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் ஆளும்கட்சியான அதிமுக, உண்ணாவிரத போரட்டம் நடத்தி வருகிறது. இதில் தமிழக முதல்வரும், துணை முதல்வரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள எழும்பூர் ரயில் நிலையத்தில் , விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட்டனர் . அப்போது விவசாயிஒருவர் மயங்கி விழுந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் ரயில் மறியல் போரட்டத்தில் ஈடுபட்டவிவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

அடுத்த செய்தி