ஆப்நகரம்

சென்னையில் ரு.6.88 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் கடத்தல்

சென்னை சூளைமேட்டில் இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 6 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 20 கிலோ தங்கக் கட்டிகளை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Samayam Tamil 16 Jan 2019, 2:57 pm
சென்னை சூளைமேட்டில் இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 6 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார்20 கிலோ தங்கக் கட்டிகளை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
Samayam Tamil ko


சென்னை சூளைமேட்டில் வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இன்று திடீர்சோதனை மேற்கொண்டனர். அந்தநேரத்தில் சூளைமேட்டுவழியாக வந்த பி.எம்.டபிள்யூ. கார் ஒன்றை சோதனையிட்டபோது அதில் ஏராளமான தங்கக் கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றுக்கு உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் காரில் இருந்த 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த நபர், விமானப் பயணிகள், மற்றும் உள்ளூரை சேர்ந்த நபர்கொண்டு தங்கக் கட்டிகளை கடத்தி விற்பனை செய்வது தெரியவந்தது.

அந்த வகையில் இலங்கையிலிருந்தும் கடத்தி வரப்பட்ட 20 கிலோ 600 கிராம் தங்கக் கட்டிகளை பி.எம்.டபிள்யூ காரில் எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. மேலும் அத்துடன் 21 லட்சம் ரூபாய் பணமும் இருந்தது. இவர்கள் 5 பேரையும் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இவர்கள் கப்பல் மூலம்இலங்கையிலிருந்து தங்கத்தை தமிழகத்திற்கு கடத்தி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் சிறிய அளவில் தங்கத்தை கடத்த ஊள்ளூர் விமானங்களைபயனடுத்துவதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி