ஆப்நகரம்

இருளில் மூழ்கியது சென்னை!

வர்தா புயல் கரையை கடக்க துவங்கியதால், சென்னை முழுவதும் இருளில் மூழ்கியது.

TOI Contributor 12 Dec 2016, 12:33 pm
சென்னை : வர்தா புயல் கரையை கடக்க துவங்கியதால், சென்னை முழுவதும் இருளில் மூழ்கியது.
Samayam Tamil chennai has surrounded by dark
இருளில் மூழ்கியது சென்னை!


சென்னையில் இருந்து 50 கி.மீ., மையம் கொண்டுள்ள அதிதீவிர வர்தா புயல், சென்னைக்கு அருகே கரையை கடக்க துவங்கியது. இதனால் அங்கு 120 கி.மீ., முதல் 130 கி.மீ., வேகத்தில் காற்று வீசுகிறது. இது அவ்வப்போது 140 கி.மீ., வேகத்தை எட்டியுள்ளது.

காலை 8.30 மணி வரை சென்னை 6 செ.மீ., புழல், காஞ்சிபுரம் 5 செ.மீ., பொன்னேரி, செங்குன்றம், செம்பரம்பாக்கம் 3 செ.மீ., மழை அளவு பதிவாகியுள்ளதாக பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். வர்தா புயல் சரியாக மதியம் 2 மணி முதல் 5 வரையில் கரையை கடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புயல் மேகங்கள் முழுவதுமாக சூழ்ந்ததால் சென்னை நகரம் முழுவதும் இருள் சூழ்ந்தது. காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏற்கனவே பல இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பழவேற்காடு பகுதியில் டிரான்ஸ்பார்மர் சாலையில் விழுந்தது. கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

அடுத்த செய்தி