ஆப்நகரம்

'உதயநிதி வெற்றி செல்லாது': வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!

தேர்தல் ஆணையம், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் 2 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Samayam Tamil 17 Sep 2021, 5:02 pm
சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்,உதயநிதி ஸ்டாலின் வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி அத்தொகுதியின் வேட்பாளர் எம்.எல்.ரவி தொடர்ந்த வழக்கு
Samayam Tamil கோப்புப்படம்


தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு ஒரே கட்டமாக நடந்தது. அதனை தொடர்ந்து மே 2ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் முதன்முறையாக போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து அங்கு அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர் கஸ்ஸாலி களத்தில் குதித்தார். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் 81601 வாக்குகளை பெற்று 68133 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியடைந்தார். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் வெற்றி செல்லாது என்று தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் எம்.எல்.ரவி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், '' உதய நிதி ஸ்டாலின் தனது வேட்பு மனுவில், தன் மீதான குற்ற வழக்கு விவரங்களை தெரிவிக்கவில்லை, தவறான தகவலை தெரிவித்துள்ளார், அதனால் அவரது தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும்'' என கோரியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது மனுவை ஆராய்ந்த நீதிபதிகள், எம்.எல்.ரவி தொடர்ந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

அடுத்த செய்தி