ஆப்நகரம்

கேரள முதல்வருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்த தடை: உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழகம் வரும் கேரள முதல்வருக்கு எதிராக போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Samayam Tamil 14 Dec 2018, 9:58 pm
தமிழகத்திற்கு வரும் கேரள முதலமைச்சர் பினராயி ராஜனுக்கு கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil கேரள முதல்வருக்கு எதிராக போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை


வரும் 16ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் திமுக-வின் முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு சிலை திறக்கப்படுகிறது. இதில் காங்கிரஸின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பங்கேற்று கருணாநிதியின் ஆள் உயரச் சிலையை திறந்து வைக்கிறார்.

இந்த நிகழ்வில் பங்கேற்க பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், எழுத்தாளர்கள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்க கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழகம் வருகிறார்.

சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க முயன்ற விவகாரம் தொடர்பாக பினராயி விஜயன் சென்னை வரும் போது அவருக்கு கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தப்படும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் அறிவித்திருந்தார்.

அவரது கோரிக்கையை, சென்னை காவல் ஆணையர் நிராகரித்த நிலையில், அர்ஜூன் சம்பத் உயர்நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா நாராயணன், காவல் ஆணையர் உத்தரவை உறுதி செய்து, இந்து மக்கள் கட்சியின் கேரள முதல்வருக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்திற்கு தடை விதித்தார்.

அடுத்த செய்தி