ஆப்நகரம்

Breaking: அதிமுக எம்.எல்.ஏ வெற்றிக்கு எதிரான வழக்கு: ராதாபுரம் வாக்குகளை எண்ண நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

ராதாபுரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., இன்பதுரை வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு தொடர்ந்த தேர்தல் வழக்கில் தபால் ஒட்டுகளை மறு எண்ணிக்கை நடத்தச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 1 Oct 2019, 3:01 pm
கடந்த 2016ம் ஆண்டு தமிழக சட்டப் பேரவைக்கு நடந்த பொதுத் தேர்தலின் போது, நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட இன்பதுரை, தி.மு.க. வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
Samayam Tamil 3


அ.தி.மு.க. எம்.எல்.ஏ., இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வாக்கு எண்ணிக்கையின்போது தபால் வாக்குகளில் 203 தபால் வாக்குகளைத் தேர்தல் அதிகாரிகள் எண்ணாமல் நிராகரித்து விட்டதாகவும், அந்த வாக்குகளை எண்ணத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தன் மனுவில் கோரியிருந்தார்.

இந்த தேர்தல் வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்த போது தபால் ஒட்டுகளை மறு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும்,இவிஎம் இயந்திரத்தையும் மற்றும் தபால் ஓட்டுக்களை தலைமை பதிவாளர் முன்னிலையில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கை அக்டோபர் 4ம் தேதி தள்ளிவைத்தார்.

அடுத்த செய்தி