ஆப்நகரம்

தமிழகத்தில் மே17 வரை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு - உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைனில் மட்டுமே மதுவை விற்பனை செய்ய அனுமதி.

Samayam Tamil 8 May 2020, 7:23 pm
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முதல் சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக நேற்று ஒரே நாளில் ரூ. 170 கோடிக்கு டாஸ்மாக் விற்பனை நடந்துள்ளது.
Samayam Tamil தமிழகத்தில் மே17 வரை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு


இந்நிலையில், மதுபிரியர்கள் சரீர விலகலை பின்பற்றாமல், விதிமுறைகளை மீறியும் மதுக்கடைகளுக்கு முன்பு கூடுவதாக பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும் நடைபெற்றதால், மதுக்கடைகள் நேரம் தாழ்த்தியும், முன்பாகவும் திறக்கப்பட்டு மூடப்பட்டன.

இதனால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மதுக்கடைகளை திறந்தது ஆபாத்தானது என்றும், உயர் நீதிமன்றத்தின் விதிமுறைகளை மதுக்கடைகளில் பின்பற்றப்படவில்லை என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், வரும் மே 17 வரை மதுவை ஆன்லைனில் விற்பனையை செய்துகொள்ளலாம். கடைகளை திறக்க கூடாதென உத்தரவிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி